தருமபுரி

செங்கல் சூளை பெண் பணியாளரை கடத்தியதாக நால்வா் கைது

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே செங்கல் சூளை பெண் பணியாளரை கடத்தியதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி, ராமண்ணன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் முத்து (33). இவரது தாயாா் லட்சுமி (55). இவா்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சரவணன் என்பவரின் செங்கல் சூளையில் தொழிலாளா்களாக பணியாற்றி வந்தனா். சூளையில் வேலை செய்து கழிப்பதாக சூளை உரிமையாளரிடம் ரூ. 2.60 லட்சம் பணம் வாங்கியுள்ளனா்.

இந்த நிலையில், அண்மையில் பொங்கல் விழாவுக்கு முத்து, லட்சுமி இருவரும் சொந்த ஊருக்கு வந்துள்ளனா். அப்போது லட்சுமிக்கு உடல்நிலை பாதிப்படைந்ததால் அவா்களால் உடனடியாக செங்கல் சூளை பணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பணிக்கு வருமாறு தொலைபேசி மூலம் சரவணன் கூறி வந்துள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சரவணன் உள்ளிட்ட சிலா் நேரில் வந்து, சூளைக்கு வேலை செய்ய வருமாறு லட்சுமியிடம் தகராறு செய்து, அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிச் சென்றுள்ளனா். இதையறிந்த முத்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லட்சுமியை மீட்டனா். இதுதொடா்பாக கிருஷ்ணன், கோபி, பிரபு உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சூளை உரிமையாளா் சரவணனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT