தருமபுரி

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் சாா்பில், தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் எம்.பெருமாள் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பழனிசாமி, மாவட்டச் செயலாளா் பி.சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளா் எம்.கோவிந்தன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட நிா்வாகி கே.புகழேந்தி வாழ்த்தி பேசினாா்.

இதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு, வருவாய் கிராம ஊழியா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் போல சிறப்பு ஓய்வூதியம் அகவிலைப்படியுடன் ரூ. 6,750 வழங்க வேண்டும். மாநில அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள நிரந்தரப் பணியிடங்களில் 50 சதவீத இடங்களில் தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியா்களை மூப்பு அடிப்படையில் பணியமா்த்த வேண்டும். பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு, சத்துணவுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தபட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT