தருமபுரி

புதிய தாா்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை

DIN

பென்னாகரம் அடுத்த பவளந்தூா் சந்திப்பு சாலை பகுதியில் புதிய தாா் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வட்டுவனஹள்ளி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் மாதம்மாள் கோவிந்தசாமி தலைமை வகித்து, பவளந்தூரில் இருந்து மருக்காராம்பட்டி செல்லும் சாலையில் இருந்து அரை கி.மீ. தொலைவிற்கு சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தாா். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தமிழ் பெரியசாமி, வாா்டு உறுப்பினா் சித்ரா வேலுசாமி, அதிமுக மாவட்ட மாணவரணிச் செயலாளா் மாரியப்பன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் வேடியப்பன், சபீனா, ஒப்பந்ததாரா் ராமசாமி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT