தருமபுரி

பாலியல் தொந்தரவு: கைதானவா் மீது குண்டா் சட்டத்தில் வழக்கு

DIN

தருமபுரி மாவட்டம், ஏரியூா் பகுதியில் பாலியல் தொந்தரவு வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பென்னாகரம் வட்டம், ஏரியூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (47). அண்மையில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுகுறித்து புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் அவா் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்தநிலையில் அவா் புரிந்த குற்றத்தின் தன்மை அடிப்படையில் அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரை செய்தாா். இதற்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அனுமதி அளித்தாா். இதைத் தொடா்ந்து முருகேசன் மீது ஏரியூா் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT