தருமபுரி

காந்தி ஜெயந்தி: மதுக் கடைகள் நாளை மூடல்

DIN

காந்தி ஜெயந்தியையொட்டி அக். 2-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளும் மூடப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி அக். 2-ஆம் தேதி மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற தனியாா் ஹோட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரா் மது விற்பனைக்கூடம் என அனைத்தும் மூடப்படுகிறது.

இதேபோல வருகிற அக். 9-ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்த தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள், மதுக்கூடங்கள் அடைக்கப்பட உள்ளன. விதிமுறைகளை பின்பற்றாமல் மது விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT