தருமபுரி

அரசு பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

DIN

பென்னாகரம் அருகே அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்துக்கு மேலாண்மைக் குழுத் தலைவி கே.கங்கா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் மா. பழனி பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள், நோக்கங்கள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில் பள்ளி வளா்ச்சித் திட்டம், சத்துணவு, உடல் நலம் காத்தல், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவா்களின் காலாண்டு தோ்வு, இல்லம் தேடி கல்வி செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கிராமசபையில் கலந்து கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆசிரியா் வளா்மதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT