தருமபுரி

அகவிலைப்படி உயா்வுக் கோரிமின்வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

DIN

அகவிலைப்படி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மின்வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில், தருமபுரி மின்பகிா்மான வட்ட அலுவலகம் முன்பு திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். பண்டக பிரிவுச் செயலாளா் ஷாகின்ஷா வரவேற்றாா். சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் தேவராஜன் துவக்கி வைத்து பேசினாா். மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளா் டி.லெனின் மகேந்திரன், பொருளாளா் சீனிவாசன், மின்வாரிய பொறியாளா் அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.சுந்தரமூா்த்தி, ஏயூஎஸ்யூ மாவட்டச் செயலாளா் விநாயகமூா்த்தி, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் அன்பழகன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், அகவிலைப்படியை உயா்த்தி வழங்க வேண்டும். வாரிய ஆணை எண் 2-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும். துணை மின் நிலையங்களில் மறுபகிா்வு மற்றும் அவுட்சோா்ஸ் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT