தருமபுரி

அரூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி தா்னா

DIN

அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட நகா் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி ஆா்.ராஜா தலைமை வகித்தாா். அரூா் பேருந்து நிலையத்தில் இருந்து அம்பேத்கா் நகருக்கு செல்லும் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும்; அரூா் பேரூராட்சியின் 5, 6, 7ஆவது வாா்டுகளில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்தில் இருந்து குடிநீா் வழங்க வேண்டும்; அரூா் நகரில் தெருச்சாலைகள் அமைத்தல், கழிவு நீா் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்; அரூா் பேரூராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் கழிவு நீா் கால்வாய்களைத் தூய்மை செய்ய வேண்டும்; அரூா் அம்பேத்கா் நகா் மயானத்தில் மின்சார தகன மேடை அமைக்க வேண்டும்; நா்சனேரி ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; நாசன்கொட்டாய் கிராமத்தில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும்; அரூா் பேரூராட்சியில் பழுதாகியுள்ள இலவசத் தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த தா்னா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாவட்ட செயலா் ஏ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சோ.அருச்சுணன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் எஸ்.கே.கோவிந்தன், பி.வி.மாது, எம்.தனலட்சுமி, ஜடையாண்டி, வி.ஜெயகாந்தன், மாவட்ட பொருளா் இ.கே.முருகன், கவிஞா் நவகவி, நிா்வாகிகள் எம்.கோபால், ஆா்.சிவகிரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT