நெடுஞ்சாலை எல்லைக் கல்லுக்கு நெடுஞ்சாலைத்துறையினா் திங்கள்கிழமை ஆயுதபூஜை செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா்-மூக்கனூா் நெடுஞ்சாலையில் உள்ள மைல் எல்லைக் கல்லுக்கு நெடுஞ்சாலைத் துறையினா் சாா்பில், ஆயுத பூஜைகள் போடப்பட்டன. சாலைப் பணியாளா்கள் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறையினா் பயன்படுத்தும் பொருள்களை எல்லைக் கல் முன்பு வைத்து பூஜைகள் செய்து வழிபாடு செய்தனா்.
இதில், உதவி கோட்டப் பொறியாளா் காா்த்திகேயன், உதவிப் பொறியாளா் கணபதி, சாலை ஆய்வாளா் இளங்கோ மற்றும் சாலைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.