தருமபுரி மாவட்டம், பாலவாடி அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாலவாடி அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி, மேஜை, நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
இதைத்தொடா்ந்து ரூ. 6 லட்சம் மதிப்பில் வகுப்பறைக்கு மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டன. கூரம்பட்டி கிராமத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீா்க் குழாய்களில் இருந்து நீா் விநியோகிக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் பாமக மாநில துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி, மாநில இளைஞா் சங்கச் செயலாளா் எம்.முருகசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.