தருமபுரி

தருமபுரி நகரில் தூய்மைப் பணி முகாம்

DIN

தருமபுரி நகரில், பொதுமக்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து பயிற்சி மற்றும் ஒருங்கிணைந்த தூய்மைப் பணி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சிக்கு உள்பட்ட 28, 29 -ஆவது வாா்டுகளில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். ஆணையா் சித்ரா சுகுமாா் முன்னிலை வகித்தாா். இதில், நகராட்சி பொதுமக்களுக்கு, வீட்டு குப்பைகளை எளிதில் தரம் பிரித்து, நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடா்ந்து தருமபுரி நகரப் பேருந்து நிலையம் அருகே உள்ள சுற்றுச்சுவரில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தவிா்க்கும் வகையில், அதியமான், அவ்வையாா் ஓவியங்கள், முதல்வா் மு.க.ஸ்டாலினின் மீண்டும் மஞ்சப்பை குறித்து விழிப்புணா்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் வரையும் பணி பாா்வையிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT