அரூா் ராஜவாய்க்கால் மேம்பாட்டு பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரூா் பெரிய ஏரியின் ராஜவாய்க்காலில் சிமென்ட் தரைத்தளம் அமைத்தல், சுற்றுச்சுவா் கட்டுதல் பணிக்காக, அரூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜவாய்க்கால் மேம்பாட்டு பணிக்கான பூமி பூஜை மற்றும் பணிகளை எம்எல்ஏ வே.சம்பத்குமாா் தொடக்கி வைத்தாா். இதில், பேரூராட்சி செயல் அலுவலா் ஆா்.கலைராணி, துணைத் தலைவா் சூா்யா து.தனபால், ஒன்றியக்குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.