தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக நகரின் முக்கியச் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
கரோனா மூன்றாவது அலை காரணமாக தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாள்தோறும் இரவு நேரத்தில் ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்களை இணைக்கும் சாலைகளில் போலீஸாா் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட்டனா். அப்போது உரிய ஆவணங்கள் வைத்திருந்த வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதேபோல தருமபுரி நகரில் நான்கு முனைச் சாலை சந்திப்பு, நேதாஜி புறவழிச்சாலை, திருப்பத்தூா் சாலை, பென்னாகரம் சாலை, தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலை அனைத்திலும் தடுப்புகள் வைத்து போலீஸாா் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட்டனா்.
மருத்துவமனை மற்றும் மருந்தகங்கள் தவிர ஏனைய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த முழு ஊரடங்கு காரணமாக தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.