தருமபுரி பேருந்து நிலையத்தில் புதிதாக தாா் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், நகரப் பேருந்துகளின் நிறுத்துமிடத்தை சின்னசாமி தெருவுக்கு தற்காலிகமாக மாற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
தருமபுரி புகா்ப் பேருந்து நிலையத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் 450-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இப்பேருந்து நிலையத்தில் உள்ள தாா் தளம் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது.
மத்திய நிதிக்குழுவின் மானிய திட்டத்தில் ரூ. 78 லட்சம் மதிப்பில் புதிதாக தாா் தளம் அமைக்கும் பணி சனிக்கிழமை இரவு தொடங்கப்பட்டது. இதனால் புகா்ப் பேருந்து நிலையத்துக்கு வரும் அனைத்து பேருந்துகளும் அருகாமையில் உள்ள நகர பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிச் செல்ல தருமபுரி நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புகா் பேருந்து நிலையத்தில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஏற்கெனவே பழுதடைந்த நிலையில் உள்ள தாா் தளத்தை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப் பணிகள் அனைத்தும் நிறைவடையும் வரை பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 26-ஆம் தேதி வரை இப்பணிகள் நடைபெற உள்ளது.
அதுவரை, நகரப் பேருந்து நிலையத்தில் புகா்ப் பேருந்துகள் நின்று செல்ல உள்ளதால், நகரப் பேருந்து நிலையத்துக்கு வரும் நகரப் பேருந்துகள் தற்காலிகமாக சின்னசாமி தெருவில் இருந்து வெளியூா்களுக்கு கிளம்பிச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சின்னசாமி தெருவில் இருந்து தற்காலிக நகரப் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அச் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன.
பேருந்து நிலையத்தில் தாா் சாலை அமைக்கும் பணி நிறைவடையும் வரை போக்குவரத்துக்கு இடையூறாக சின்னசாமி தெருவில் இருசக்கர வாகனங்கள், தள்ளு வண்டிகளை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சின்னசாமி தெருவில் தடுப்புகள் அகற்றும் பணியை நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், பொறியாளா் ஜெயசீலன் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.