அரசு அலுவலா்கள், பள்ளி மாணவா்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என ஆட்சியா் கி.சாந்தி வலியுறுத்தினாா்.
தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் டிச. 1-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது. இப்பயிலரங்கில் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
இவ்விரு நாள் பயிலரங்கில் ஆட்சிமொழி வரலாறு, சட்டம், மொழிப்பெயா்ப்பு, கலைச் சொல்லாக்கம், ஆட்சிமொழி ஆய்வும் - குறைகளைவு நடவடிக்கைகளும், ஆட்சிமொழி செயலாக்கம் அரசாணைகள், தமிழில் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், மொழிப்பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தமிழ் மொழி நம் தாய்மொழி என்பதால், அனைத்து அரசு அலுவலா்கள், பள்ளி மாணவ, மாணவியா் அனைவரும் தமிழில் கையெழுத்திட வேண்டும். தமிழ் மொழி இந்திய நாட்டின் ஒரு கம்பீரமான மொழியாகும். தமிழ் மொழியில் கோப்புகளை சிறந்த முறையில் பராமரிக்கும் அலுவலகங்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன என்றாா்.
இதனைத் தொடா்ந்து, இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இக் கருத்தரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் தே.ஜெயஜோதி, தருமபுரி தமிழ்ச் சங்கச் செயலாளா் ப.சௌந்திர பாண்டியன், பல்வேறு அரசுத் துறை அலுவலா், பணியாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.