வீடுகளில் தேசியக் கொடியேற்றுவதை வலியுறுத்தி, அரூரில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு ஊா்வலம் சென்றனா்.
ஊா்வலத்துக்கு பாஜக நகரச் செயலாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பாஜகவினா் இருசக்கர வாகனத்தில் தேசியக் கொடியை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா்.
இதில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் பிரவீன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சாமிக்கண்ணு, எஸ்.சி. அணி மாநிலச் செயலாளா் கே.கே.சாட்சாதிபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.