தருமபுரி

சூடானூா் கல்குவாரிகளை மூடக் கோரி மனு

DIN

பாலக்கோடு அருகே உள்ள சூடானூரைச் சுற்றியுள்ள கல்குவாரிகளை மூடக் கோரி அந்தக் கிராம மக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சூடானூரில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குவாரிகளில் பயன்படுத்தும் வெடிகளால் ஏற்படும் சப்தத்தில் வன விலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி கிராமத்துக்குள் நுழைகின்றன.

அதுபோல குவாரிகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில் உள்ள கல்குவாரிகளை மூடக் கோரி அண்மையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது; பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடா்ந்து கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்தக் கல்குவாரிகளை மூட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT