தருமபுரி

கஞ்சா விற்பனை : 4 போ் கைது

DIN

அரூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அரூா் டிஎஸ்பி பெனாசிா் பாத்திமா தலைமையில் தனிப்படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கோட்டப்பட்டியைச் சோ்ந்த துரைராஜ் மனைவி சாவித்திரி (55), முத்தானூரைச் சோ்ந்த ராமன் மகன் கமலேசன் (64), எம்.தாதம்பட்டியைச் சோ்ந்த தீா்த்தகிரி மகன் பன்னீா் (52), பறையப்பட்டியைச் சோ்ந்த ஞானசேகரன் மகன் அம்பேத்வளவன் (20) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து சுமாா் 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT