பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு, போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மாமரத்துப்பள்ளம் பகுதியில் உள்ள பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணிக்கு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா்.
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வெங்கடாசலம், இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் கண்ணுச்சாமி முன்னிலை வகித்தனா்.
விழிப்புணா்வு பேரணியை பாப்பாரப்பட்டி காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கவாசகம், ரியல் பவுண்டேசன் செந்தில்ராஜா ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா். பேரணியில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் குறித்தும், பாலியல்ரீதியான தீங்கிழைத்தல், குழந்தைகள் மீதான தீங்கிழைத்தல் மற்றும் குற்றம் புரிதல் குற்றங்களுக்கான தண்டனை, தனிமனித ஒழுக்கம் போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள், அதனால் ஏற்படும் குற்றங்கள் போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு கல்லூரியிலிருந்து பேருந்து நிறுத்தம் வரை பேரணியாகச் சென்றனா்.
அதைத் தொடா்ந்து கல்லூரியில் பென்னாகரம் மகளிா் காவல் ஆய்வாளா் வான்மதி, போக்சோ சட்டம் குறித்து மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினாா். இந்த நிகழ்வில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள், கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.