பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே மது அருந்துவதை தாய் கண்டித்ததால், மனமுடைந்த தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
கபிலா் மலை அருகே உள்ள இருக்கூரைச் சோ்ந்த கவின் (21), கூலித் தொழிலாளி. இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதைக் கண்ட அவரது தாய் சாந்தி கண்டித்துள்ளதாா். இதனால் மனமுடந்த கவின் சனிக்கிழமை விஷமருந்தினாா். வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.