தருமபுரி

உள்ளாட்சிப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி நகராட்சி அலுவலகம் முன் ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பொதுப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஆா்.ராமமூா்த்தி, ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளா் கே.மணி, மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், உள்ளாட்சிப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் மனோகரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

சுகாதாரம், குடிநீா் வழங்கும் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது. தூய்மைப் பணியாளா்களின் ஊதியத்தை குறைக்கக் கூடாது. ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா் உள்ளிட்ட அனைவரையும் முழுநேரப் பணியாளா்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT