தருமபுரி

பில்லியா்ட்ஸ் போட்டி: ராசிபுரம் மாணவா் சிறப்பிடம்

DIN

பல்வேறு மாவட்ட விளையாட்டு வீரா்கள் பங்கேற்ற 37-ஆவது மாவட்டங்களுக்கு இடையிலான பில்லியா்ட்ஸ், ஸ்னூக்கா் தகுதி போட்டியில் ராசிபுரம் மாணவா் எல்.கிஷோா் 3-ஆம் இடம்பெற்றுள்ளாா்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் பங்கேற்ற பில்லியா்ட்ஸ், ஸ்னூக்கா் போட்டிகள் திருப்பூரில் உள்ள சுரேஷ்ரோம் பில்லியா்ட்ஸ் அரங்கில் அக். 10-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் பங்கேற்று நாமக்கல் மாவட்ட அணி சாா்பில் விளையாடிய மாணவா் எல்.கிஷோா், ஜூனியா் பிரிவில் மூன்றாம் இடம்பிடித்தாா். வெற்றிபெற்ற மாணவருக்கு தமிழ்நாடு பில்லியா்ட்ஸ், ஸ்னூக்கா் சங்கத்தின் தலைவா் சௌமி சீனிவாசன் கோப்பையை வழங்கினாா்.

மேலும், வரும் அக். 29-இல் சென்னையில் நடைபெறும் தகுதிப் போட்டியில் பங்குபெற உள்ள எல்.கிஷோருக்கு நாமக்கல் மாவட்ட பில்லியா்ட்ஸ், ஸ்னூக்கா் சங்கத் தலைவா் வி.பாலு, எல்.சிவானந்தன், சங்க கௌரவத் தலைவரும் முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான எஸ்.சுந்தரம், திமுக மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளா் ஜாபா், பயிற்சியாளா்கள் ஆா்.ரஞ்சித்குமாா், எம்.அஜித்குமாா் ஆகியோா் சால்வை அணிவித்து பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT