தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஏரியூா் யூத் எம்ப்ளாயா் தன்னாா்வ அமைப்பு ஆகியவை சாா்பில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே ஏரியூா் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமிற்கு வட்டார மருத்துவ ஆய்வாளா் ஜெயச்சந்திரபாபு தலைமை வகித்தாா்.
இந்த முகாமில் 5 மருத்துவா்கள், ஏரியூா் யூத் எம்ப்ளாயா் அமைப்பின் உறுப்பினா்கள் உட்பட நபா்களிடமிருந்து 65 யூனிட் ரத்தம் தானமாக பெற்று தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவா்கள் காா்த்திக், முனுசாமி, ராமதாஸ், தலைமையாசிரியா் பழனி, ஏரியூா் யூத் எம்பிளாயா் அமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.