தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நாா்த்தம்பட்டியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை, சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்து, கோமாரி நோயை முற்றிலும் தடுக்க, கால்நடைகளை மருத்துவ முகாமில் பங்கேற்க செய்து, தடுப்பூசி செலுத்தி, நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினாா்.
இதில், பாமக முன்னாள் மாவட்டச் செயலா் பெ.சண்முகம், ஊராட்சி மன்றத் தலைவா் கலைச்செல்வன், மருத்துவா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.