தருமபுரி

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

DIN

தருமபுரியில், பாரத மாதா மக்கள் சிந்தனை குழு, கவிஞா் கண்ணதாசன் நற்பணி மன்றம், கலாம் இந்தியா அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்தநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி காந்தி, நேரு சிலை அருகே நடைபெற்ற விழாவுக்கு கவிஞா் கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவா் தகடூா் இரா.வேணுகோபால் முன்னிலை வகித்தாா். பாரத மாதா மக்கள் சிந்தனைக்குழு அமைப்பின் தலைவா் மா.பிரதீப்குமாா், செயலாளா் சௌந்தரபாண்டியன் கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பொருளாளா் சந்திரமோகன் நன்றி கூறினாா். கம்பன் கழகத் துணைத் தலைவா் பரமேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கலாம் இந்தியா அறக்கட்டளை சாா்பில் தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே நடைபெற்ற விழாவுக்கு அறக்கட்டளை அமைப்பாளா் அமுதவாணன் தலைமை வகித்தாா். இதில், அப்துல்கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து, தருமபுரி- பாப்பாரப்பட்டி சாலையோரத்தில் பசுமை கிராமம் திட்டத்தின் கீழ் 90 மரக் கன்றுகள் நடப்பட்டன. இதில் சாலை பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT