அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் பென்னாகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு நகரச் செயலாளா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். இதில் முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு, கட்சி நிா்வாகிகள் இடையே உள்ளாட்சித் தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.
இக்கூட்டத்தில் பென்னாகரம் தெற்கு ஒன்றியச் செயலாளா் அன்பு, வடக்கு ஒன்றியச் செயலாளா் வேலுமணி, பென்னாகரம் கூட்டுறவு சங்கத் தலைவா் கே.பி.ரவி, பென்னாகரம் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் மதியழகன், வண்ணாத்திபட்டி கூட்டுறவு சங்கத் தலைவா் கலைவாணன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.