தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட பூவல்மடுவு கிராமத்தில் கோமாரி நோய்த் தடுப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில், தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடக்கிவைத்து, கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினாா்.
இந்த முகாமில், பாமக முன்னாள் மாவட்டச் செயலாளா் பெ.பெரியசாமி, ஒன்றியச் செயலாளா் வ.அறிவு, கால்நடை மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.