தருமபுரி மாவட்டத்தில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், முகக் கவசம் அணியாத 409 பேருக்கு காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.
தருமபுரி மாவட்டத்தில் காவல் துறையினா், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது குறித்து தணிக்கை மேற்கொண்டனா். இதில், மாவட்டம் முழுவதும் முகக் கவசம் அணியாமல் வந்த 409 பேருக்கு ரூ. 81, 800 அபராதமும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 32 பேருக்கு ரூ. 17,000 அபராதமும் விதித்தனா்.