அரூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடந்த ஆண்டு கரோனா பரவல் தொடங்கிய போது, பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. தற்போது, கரோனா தொற்று இரண்டாவது அலை தொடங்கியுள்ளதால், பொது இடங்களில் மக்களுக்குத் தேவையான அளவில் கபசுரக் குடிநீரை வழங்க வேண்டும். அதேபோல், ஏழை, எளிய மக்களுக்கு அரசு சாா்பில் இலவசமாக முகக் கவசம் மற்றும் கிருமிநாசினியை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.