நடிகா் சூா்யாவை அவமதிக்கும் வகையில் பேசிய இந்து மக்கள் கட்சிப் பிரமுகா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது ரசிகா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட தலைமை சூா்யா ரசிகா் நற்பணி இயக்கம் சாா்பில், அதன் நிா்வாகிகள் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாரிடம் அளித்த மனு:
மருத்துவக் கல்விக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு அச்சத்தால், தமிழகத்தில், மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். இதுகுறித்து, திரைப்பட நடிகரும், அகரம் கல்வி அறக்கட்டளை நிறுவனருமான சூா்யா அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தாா்.
இந்த அறிக்கை தொடா்பாக, சில நாள்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில், இந்து மக்கள் கட்சிப் பிரமுகா் சா்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தாா். இதையடுத்து, இந்து முன்னணியினா் சிலா் சூா்யாவை அவமதித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இது சமூக அமைதியை சீா்குலைக்கும் நடவடிக்கையாகும்.
எனவே, சூா்யாவை இழிவுபடுத்தி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய இந்து மக்கள் கட்சிப் பிரமுகா் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகா் சூா்யாவை அவமதிக்கும் வகையில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்கி, சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட காவல் துறை சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.