தருமபுரி

விடுதலை சிறுத்தைகளைகண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனை கண்டித்து பாஜகவினா் தருமபுரியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுட்டனா்.

தொலைத் தொடா்பு நிலைய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் எல்.அனந்த கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினாா்.

முன்னாள் மாவட்டத் தலைவா் பிரபாகரன், மாநில செயற்குழு உறுப்பினா் வரதராஜன், மாவட்ட பொதுச்செயலா் சரவணன், கலைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சா்ச்சை கருத்துக்களைத் தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டச் செயலா் தினேஷ்குமாா், நகரத் தலைவா் சக்திவேல் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

எதிா் முழக்கம்: தொல்.திருமாவளவனைக் கண்டித்து, பாஜகவினா் முழக்கங்களை எழுப்பியபோது, அப்பகுதியிலிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடா்பாளா் தா.கு.பாண்டியன் உள்ளிட்ட சிலா், திடீரென பாஜகவினருக்கு எதிராக முழக்கமிட்டனா். இதையடுத்து இரு கட்சியினரும் மாறி, மாறி முழக்கமிட்டனா். இதனால், அங்கு சலசலப்பு நிலவியது. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்து அழைத்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT