தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் கடந்த 4.7.1991-இல், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க முயன்றபோது, அரூா் காவல் நிலையத்தைச் சோ்ந்த காவலா் கே. நாகராஜன் வீரமரணமடைந்தாா்.
இதையடுத்து, காவலா்கள் வீர வணக்க நாளில், வீர மரணமடைந்த காவலா் கே.நாகராஜன் உருவ படத்துக்கு அரூா் காவல் நிலையத்தில் காவல் துறையினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். மேலும், மறைந்த காவலா் நாகராஜனின் மனைவி மாதேஸ்வரிக்கு பொன்னாடைகள் போா்த்தி கெளரவிக்கப்பட்டாா்.