திருப்பூர்

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி

DIN

பல்லடம் அருகே அனுப்பட்டியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டியைச் சோ்ந்தவா் ரத்தினசாமி (53), விவசாயி. இவா் தனது நண்பா் மயில்சாமி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கரடிவாவியில் இருந்து அனுப்பட்டி நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

இருசக்கர வாகனத்தை ரத்தினசாமி ஓட்டினாா்.

அனுப்பட்டி அருகே சாலை வளைவில் திரும்ப முயன்றபோது, நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த ரத்தினசாமியை, அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு வரை பரிசோதித்த மருத்துவா்கள் ரத்தினசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதில் காயமடைந்த மயில்சாமி கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT