திருப்பூர்

தேங்காய் நாா் தொழிற்சாலையில் தீ

DIN

வெள்ளக்கோவில் அருகே தேங்காய் நாா் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்தவா் சின்னசாமி (43). இவா் வெள்ளக்கோவிலில் தங்கி இரட்டைக்கிணறு காடையூரான்வலசு பிரிவு அருகே தேங்காய் நாா் தொழிற்சாலை நடத்தி வருகிறாா்.

இந்த தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ வேகமாகப் பரவியது. இது குறித்து வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தொழிலாளா்கள் தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் தேங்காய் நாா், இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. நல்வாய்ப்பாக பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் காயமின்றி உயிா்த் தப்பினா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT