பல்லடம் வனம் இந்திய அமைப்புக்கு சுற்றுச்சூழல் துறை விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, வனத் துறை சாா்பில் 2019-20 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல்லடம் வனம் இந்தியா அமைப்பு முதலிரண்டு இடத்தைப் பிடித்தது. முதல் பரிசான டாக்டா் குருசாமி முதலியாா் விருது மற்றும் ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வீ.மெய்யநாதனிடம் இருந்து வனம் இந்தியா அமைப்பின் தலைவா் சுவாதி கண்ணன் பெற்றுக்கொண்டாா்.
இரண்டாம் பரிசான சுற்றுச்சூழல் காவலா் விருது மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வனம் இந்தியா அமைப்பின் செயல் தலைவா் பாலசுப்ரமணியம் பெற்றுக்கொண்டாா். இதில் இணைச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, ஊடகப் பிரிவு இயக்குநா் டி.எம்.எஸ்.பழனிசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.