திருப்பூரில் இளம்பெண் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா், 15 வேலம்பாளையம் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் (27). இவரது மனைவி வெண்ணிலா (24). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். சந்தோஷ் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்ததோடு அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்த நிலையில், சந்தோஷ் வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திவிட்டு வந்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னா் சிறிது நேரத்தில் வெளியே சென்ற சந்தோஷ் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதற்கிடையே, வெளியே சென்றிருந்த குழந்தைகள் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வெண்ணிலா கழுத்தில் துணி சுற்றிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த 15 வேலம்பாளையம் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். இதில், வெண்ணிலாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தோஷ் நாடகமாடியது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா், சந்தோஷை வியாழக்கிழமை கைது செய்தனா்.