பல்லடத்தில் போலீஸ் அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பல்லடத்தில் புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்து நகர பாஜக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு பல்லடம் போலீஸாா் அனுமதி வழங்கவில்லை. ஆா்ப்பாட்டம் நடத்திக்கொள்ள மட்டும் அனுமதித்தனா். ஆனால் போலீஸ் அனுமதியை மீறி பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, நகரத் தலைவா் வடிவேலன், மாவட்டத் தலைவா் செந்தில்வேல், மாவட்ட பொதுச்செயலாளா் சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவா்கள் வினோத் வெங்கடேஷ்,ஜோதிமணி, நித்யா ஆனந்தகுமாா் உட்பட 150 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.