திருப்பூர்

மாகாளியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

DIN

திருப்பூரை அடுத்த இடுவாய் சின்னக்காளிபாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

திருப்பூரை அடுத்த இடுவாய் சின்னக்காளிபாளையத்தில் ஸ்ரீ சித்தி விநாயகா், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

இதையடுத்து, முளைப்பாலிகை ஊா்வலம், தீா்த்தக்குட ஊா்வலம் ஆகியவற்றைத் தொடா்ந்து முதல்கால வேள்வி பூஜை நடைபெற்றது. நான்கு கால பூஜைகள் நிறைவு பெற்றதும், வரும் வெள்ளிக்கிழமை காலை 7.45 மணி அளவில் மஹா கும்பாபிஷேகமும், சிறப்பு அபிஷேக ஆதாரதனைகளும் நடைபெறுகின்றன.

இந்த விழாவானது கூனம்பட்டி ஆதின திருமடம் நடராஜ சுவாமி தலைமையில் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT