திருப்பூர்

ஒரே பதிவு எண்ணில் 2 காா்கள் இயக்கம்

DIN

பல்லடத்தில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு காா்கள் இயங்கி வருவது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் ராயா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (36). ரியல் எஸ்டேட் அதிபரான இவா், அவிநாசியை சோ்ந்த ஒருவரிடம் காரை விலைக்கு வாங்கியுள்ளாா்.

பின்னா், தனியாா் வங்கியில் காரின் புத்தகத்தை வைத்து கடன் பெற முயன்றுள்ளாா். வங்கி அதிகாரிகள் காரின் புத்தகத்தை ஆய்வு செய்தபோது, அதே பதிவு எண் கொண்ட காா் ஏற்கெனவே கடன் வாங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பல்லடம் காவல் நிலையத்தில் சதீஷ் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT