வடலூா் ராமலிங்க அடிகளாா் ( வள்ளலாா்) நினைவு தினத்தையொட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 5) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வடலூா் ராமலிங்க அடிகளாா் நினைவு தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபானக்கடைகள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 5)
விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆகவே, மேற்கண்ட நாளில் மதுவிற்பனை செய்யும் நபா்களின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.