திருப்பூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதாக அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
திருப்பூா் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் தலைமை வகித்தாா்.
இதில், அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: திருப்பூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு நாள்தோறும் ரூ.708 ஊதியமாக நிா்ணயித்து மாவட்ட ஆட்சியா் அரசாணை வெளியிட்டுள்ளாா். இந்த நிலையில், தூய்மைப் பணிகளை ஒப்பந்தம் எடுத்த தனியாா் நிறுவனம் தூய்மைப் பணியாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.327 மட்டுமே ஊதியமாக வழங்குகிறது. அதிலும் 30 நாள்களுக்குப் பதிலாக 26 நாள்களுக்கு மட்டுமே இந்த ஊதியம் வழங்கப்படுகிறது.
ஆகவே, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்துள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் நாய் தொல்லைகள் அதிகரித்துள்ளதால் பெண்கள், குழந்தைகள் வெளியில் செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றனா்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாத்திமா தஸ்ரின் பேசுகையில், திருப்பூா் மாநகராட்சி 45ஆவது வாா்டில் சுமாா் 400க்கும் மேற்பட்ட குடிநீா் இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக மாநகராட்சிக்கு வருவாய் தடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
இதற்கு பதிலளித்த மேயா் என்.தினேஷ்குமாா் கூறுகையில், சட்டத்துக்கு உள்பட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக 64 வளா்ச்சிப் பணிகளுக்கு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், மாநகராட்சி துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.