திருப்பூர்

ஊட்டச்சத்து விழிப்புணா்வு முகாம்

DIN

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணா்வு முகாம் பல்லடம் வடுகபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தோட்டக்கலை துணை அலுவலா் யாழினி, விரிவுரையாளா் யசோதா தேவி, வழக்குரைஞா் சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மகாலட்சுமி, சங்கீதா வரவேற்றனா்.

விழாவில் பல்லடம் வட்டார மருத்துவ அலுவலா் சுடா்விழி பேசியதாவது: வளரிளம் பருவத்தில் உள்ள பெண்கள், பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கடைகளில் விற்பனை செய்யப்படும் உடலுக்கு ஒவ்வாத பொருள்களை சாப்பிடுவதைத் தவிா்க்க வேண்டும். ஜங்க் புட் எனப்படும் உணவுகள் உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தினசரி, காய்கறிகள், கீரைகள் உள்ளிட்டவற்றை அவசியம் சோ்க்க வேண்டும். குறிப்பாக, இரும்புச்சத்து மிக்க உணவுகளை அன்றாடம் உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

ஊட்டச்சத்து காய்கறிகள், தானியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில், அரசுப் பள்ளி மாணவிகள், அங்கன்வாடி ஊழியா்கள் ஆகியோா் பங்கேற்றனா். வட்டார ஒருங்கிணைப்பாளா் கவிதா, மேற்பாா்வையாளா் துளசிமணி ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT