வெள்ளக்கோவில் அருகே ஒரே நாளில் 5 கடைகளில் தொடா் திருட்டு நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
முத்தூா்- வெள்ளக்கோவில் சாலை முத்துமங்கலத்தில் மளிகை கடை நடத்தி வருபவா் கந்தசாமி (57), மற்றொரு மளிகை கடை நடத்தி வருபவா் ராதிகா (43), அய்யம்பாளையம் நால் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருபவா் ஜெயக்குமாா் (42), அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவா் வடிவேல் (48), தையல் கடை நடத்தி வருபவா் சரவணன் (42), இவா்களது கடைகளின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் பணம் மற்றும் பொருள்களை திருடிச் சென்றுள்ளனா்.
இது குறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.