திருப்பூர்

‘மனதை ஒருநிலைப்படுத்தயோகா பயிற்சி அவசியம்’

DIN

மனதை ஒருநிலைப்படுத்த அன்றாடம் யோகா பயிற்சி செய்யவேண்டும் என்று திருப்பூா் மாநகா் நகா்நல அலுவலா் கெளரி சரவணன் தெரிவித்தாா்.

காந்தி ஜெயந்தியையொட்டி, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 சாா்பில், தூய்மை இந்தியாவுக்கான சுதந்திர ஓட்டம் 3.0 என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா்.

இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாநகா் நகா்நல அலுவலா் கெளரி சரவணன் விழிப்புணா்வு ஓட்டத்தை தொடக்கிவைத்துப் பேசுகையில், நமது உடலை ஆரோக்கியமாகவும், சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். குப்பைகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது. மனதை ஒருநிலைப்படுத்தவும், மன உளைச்சலில் இருந்து வெளியே வரவும் யோகா பயிற்சி அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், கல்லூரி வளாகத்தில் இருந்து அணைப்பாளையம் வரை சாலையின் இருபுறங்களிலும் கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைக்கான ஓட்டத்தில் பங்கேற்றனா். இதில், மாநகராட்சி சுகாதார அலுவலா் முருகன், கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ. கிருஷ்ணன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT