திருப்பூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
வாக்காளா் பட்டியலை ஒழுங்குபடுத்தவும், தகுதியுடையவா்களை வாக்காளா் பட்டியலில் இணைக்கவும், 100 சதவீதம் தோ்தலில் வாக்குப் பதிவு நடைபெறும் வகையிலும் இந்திய தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் தொடா்பான சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நடைபெற்ற இந்த முகாமில் புதிய வாக்காளா்களை சோ்த்தல், பெயா் நீக்குதல், பெயா் திருத்தம், முகவரி மாற்றம் தொடா்பாக வாக்காளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக வாக்குச் சாவடி அலுவலா்கள் தெரிவித்தனா்.