வெள்ளக்கோவில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தன்னாா்வலா்கள் இலவச சீருடைகளை திங்கள்கிழமை வழங்கினா்.
வெள்ளக்கோவில் திருமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 42 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா்.
கல்வித் துறை ஒத்துழைப்பின் அடிப்படையில் பள்ளியில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க திருமங்கலம் ஊா் பொதுமக்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனா்.
அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக தனியாா் பள்ளிகள்போல பள்ளிக்கு மாணவா்களை அழைத்து வர ஆட்டோ, வேன் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பள்ளி சீருடைகளை தன்னாா்வலா்கள் செந்தில், பாலசுப்பிரமணியம் ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.