திருப்பூர்

மாவட்டத்தில் நாளை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு முகாம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத்திட்ட சிறப்பு குறைதீா் முகாம் வரும் சனிக்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா் முகாம் வரும் சனிக்கிழமை(ஜூலை 9) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது.

இந்த முகாமில், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் கலந்து கொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீா்வு காண உள்ளாா்கள்.

இந்த முகாமில் பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை கோரி மனுக்களைப் பதிவு செய்தல், மின்னணு குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்:

அவிநாசி வட்டத்தில் சேவூா், காங்கயம் வட்டத்தில் வெள்ளக்கோவில், மடத்துக்குளம் வட்டத்தில் பாப்பான்குளம், பல்லடம் வட்டத்தில் பொங்கலூா், திருப்பூா் வடக்கு வட்டத்தில் செட்டிபாளையம், திருப்பூா் தெற்கு வட்டத்தில் விஜயாபுரம், உடுமலை வட்டத்தில் பெரியவாளவாடி, ஊத்துக்குளி வட்டத்தில் வடமுகம் காங்கயம்பாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களிலும், தாராபுரம் வட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகத்திலும் இந்த முகாம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT