திருப்பூா் அருகே 15 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பழ வியாபாரி போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மதுரை மாவட்டம் எம்.கல்லாம்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (36), இவா் திருப்பூரை அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் வசித்து வருகிறாா். மேலும், மங்கலம் பகுதியில் வேன் மூலமாக பழ வியாபாரம் செய்து வருகிறாா். கிருஷ்ணமூா்த்தி அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோா், திருப்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா், கிருஷ்ணமூா்த்தியை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.