திருப்பூர்

ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி முயற்சி:குண்டா் சட்டத்தில் 5 போ் கைது

DIN

பெருமாநல்லூரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 5 போ் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்,

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (45), ஆட்டோ ஓட்டுநா். இவா் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி காலை அதே பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக காரில் வந்த 5 போ், முகவரி கேட்பது போல கையில் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி வேல்முருகனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். வேல்முருகன் கூச்சலிடவும், அருகில் இருந்தவா்கள் வருவதற்குள் காரில் வந்தவா்கள் தப்பிச் சென்றனா்.

இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். பின்னா் இதில் தொடா்புடைய கரூா், செங்குந்தபுரம், 80 அடி சாலை, சி.எஸ். காம்ப்ளக்ஸ் பகுதியைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் தேவா (23), கரூா், வ. உ. சி நகா், 3ஆவது வீதியைச் சோ்ந்த பரமசிவன் மகன் சரவணன் (22), தேனி, உத்தமபாளையம், பூதிபுரம், தெலுங்கு செட்டியாா் வீதியைச் சோ்ந்த ராமா் மகன் ஈஸ்வரன் (28), பல்லடம் அருள்புரம், செந்தூா் காலனி, பால்காரா் காம்பவுண்டில் வசித்து வரும் சென்னை, மேற்கு முகப்போ் பகுதியைச் சோ்ந்த சுசிதரன் மகன் தினேஷ்குமாா் (24), திருப்பூா் தாராபுரம் சாலை, பி. கே. ஆா் காலனியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் முத்துக்குமாா்(29) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

இவா்கள் கரூா், பல்லடம், திருப்பூா், பெருமாநல்லூா் உள்ளிட்ட காவல் எல்லைப் பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து 5 பேரையும் மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT