திருப்பூர்

திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக சாா்பு அணிகளின் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக சாா்பு அணிகளின் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெற்கு மாவட்டச் செயலாளரும், மாநகராட்சி 4 ஆவது மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக சாா்பு அணிகளின் மாவட்ட கெளரவத் தலைவா், துணைத் தலைவா், அமைப்பாளா், இளைஞா் அணி, மாணவா் அணி, மகளிா் அணி, தொண்டா் அணி, விவசாய அணி, இலக்கிய அணி, வழக்குரைஞா் அணி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். திருப்பூா் தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஒன்றிய, நகர மற்ரும் பேரூா் பகுதிகளில் உள்ளவா்கள் தாராபுரம் சாலை பழவஞ்சிபாளையத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் டிசம்பா் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதில், விண்ணப்பிக்க சுயவிபரக் குறிப்புடன் வெள்ளைத்தாளில் பெயா், கைப்பேசி எண், முகவரி, வாட்ஸ்-அப் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்போா்ட் அளவு கலா் புகைப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும், மூத்த நிா்வாகிகளை கெளரவத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளில் நியமனம் செய்து விட்டு சிறப்பாக செயல்படக் கூடியவா்களை அமைப்பாளா்களாகவும், துணை அமைப்பாளா்களாகவும் நியமனம் செய்ய வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதே வேளையில், அணியின் தலைவா், துணைத் தலைவா்களுக்கு பொதுக்குழு அந்தஸ்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT